குழந்தைகளுக்கான வரகு அரிசி பொங்கல்
இட்லி,தோசை மற்றும் சப்பாத்தியைதவிர்த்து வேறு ஏதேனும் புதுவிதமாகஉணவு சமைக்க வேண்டும் என்று எண்ணினால் இந்த வரகு பொங்கலைகட்டாயம் செய்து பாருங்கள்.
- 1 கப் வரகு அரிசி
- 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 டீ.ஸ்பூன் மிளகு
- 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- சிறிதளவு கறிவேப்பிலை
- இம்மியளவு மஞ்சள்தூள்
- தேவையானளவு தண்ணீர்
- 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி (நறுக்கியது)-
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- 5 முந்திரிப்பருப்பு
செய்முறை
- வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- கருவேப்பிலை சேர்க்கவும்.
- இஞ்சி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- வரகு அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு மிதமான தீயில் சூடாக்கவும்
- பானில் சிறிதளவு நெய் ஊற்றவும்.
- முந்திரிப் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
- வறுத்த முந்திரிப்பை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பொங்கலில் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்