முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை
காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான காலை சிற்றுண்டியாக இந்த தோசையை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
- கடலை மாவு -1 கப்
- முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள்தூள் -கால் டீ.ஸ்பூன்
- மல்லித் தூள்-அரை டீ.ஸ்பூன்
- கரம் மசாலா-அரை டீ.ஸ்பூன்
- ஒரு பெரிய பவுலில் கடலைமாவு,முளைகட்டிய பச்சை பயறு,மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சிறிதளவு மோர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 10 முதல் 15 நிமிடங்களுக்கு அதனை ஒரு ஓரமாக வைக்கவும்.
- அதன் பின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் ஊற்றவும்.
- பின்பு கரண்டியால் மாவை எடுத்து எப்பொழுதும் போல தோசை சுடலாம்.
- தோசை பொன்னிறமானதும் திருப்பிப்போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம்.