ராகி ரவா உப்புமா
குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி தோசை தவிர்த்து ஆரோக்கியமாக வேறுஎன்ன சிற்றுண்டி கொடுக்கலாம் என்றும் யோசிக்கும் அம்மாவாக நீங்கள் இருந்தால் இந்த ராகிரவா உப்புமா சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக அமையும்.
- · ராகிபவுடர்- ஒரு கப்
- · ரவை-அரை கப்
- · வெங்காயம்-1 (நறுக்கியது)
- · தக்காளி-1 (நறுக்கியது)
- · பீன்ஸ்-நறுக்கியது (விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
- · கடுகு-அரை டீ.ஸ்பூன்
- · எண்ணெய்-1 டீ.ஸ்பூன்
- · கேரட்-1 (நறுக்கியது)
- · மிளகாய்-1(பொடியாக நறுக்கியது)
- பானில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
- பின்பு தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதன்பின் ரவை மற்றும் ராகி பவுடர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
- ராகி மற்றும் ரவா நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ரவை வெந்ததும் அடுப்பை அணைத்து மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.
- குறிப்பு:8 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் பொழுது மிளகாய் மற்றும் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.