கோடைக்கேற்ற ராகி மோர்
ராகியின் நற்குணங்களும், மோரின் குளிர்ச்சியும் சேர்ந்த ஒருஅற்புதமான ரெசிபி தான் இந்த ராகி மோர்.
- ராகி மாவு- அரை கப்
- மோர்- இரண்டு கப்
- கடுகு -அரை டீ.ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு -அரை டீ. ஸ்பூன்
- கடலைப்பருப்பு- அரை டீ.ஸ்பூன்
- எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
- ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து கலவை கெட்டி ஆகும் வரை கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- ஒரு ஜாரில் கிளறிய ராகி மற்றும் மோர் சேர்த்து நன்றாக ஒரு அடி அடிக்கவும்.
- பானில் எண்ணெயை சுட வைத்து அதில் கடுகு சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் அதன் பின் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- தயாரித்து வைத்த மோரினை அதில் ஊற்றி பரிமாறவும்.