சளி மற்றும் இருமலை விரட்டும் மூலிகை டீ
இந்த டீயினை செய்வதற்கு மஞ்சள் தூள், ஓமம் மற்றும் இஞ்சி வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை நான் சேர்த்துள்ளேன்.
- தண்ணீர்- 2 கப்
- ஓமம்- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள்- கால் டீ.ஸ்பூன்
- இஞ்சி 2-3 துண்டுகள் அல்லது துருவிய இஞ்சி- அரை டே.ஸ்பூன்.
செய்முறை
கடாயில் ஓமத்தினை லேசாக மணம் வரும் வரை வறுக்கவும்.
இரண்டு கப் தண்ணீரை ஊற்றவும்.
அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
வடிகட்டி அருந்தவும்.