உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
பாரம்பரியமாகஉடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும்.
- பெருஞ்சீரகம்- 2 டீ.ஸ்பூன்
- கருப்பு உலர்திராட்சை - 2 டீ.ஸ்பூன்
- வெல்லத்தூள்(ஒருவயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு)
- ஏலக்காய் தூள்-2 டீ.ஸ்பூன்
செய்முறை
இரண்டு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தினை நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் அல்லது கையை வைத்து இடித்தோ பொடியாக்கிக் கொள்ளலாம்.
ஒரு பவுலில் பெருஞ்சீரகத்தூள். உலர் திராட்சை. வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலக்கி நாள் முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்கவும்.
உலர் திராட்சைகளை நன்றாக மசித்து விடவும். இந்த தண்ணீரை வடிகட்டியால் நன்கு வடிகட்டவும்.
இந்த சர்பத்தினை பிரிட்ஜில் வைத்தோ அல்லது அப்படியே குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.