சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்
குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட்.
- சர்க்கரைவள்ளிகிழங்கு- 2
- பிரெட்தூள்- கால் கப்
- சீரகத்தூள்-அரை டீஸ்பூன்
- மல்லித்தூள்-அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
- உப்பு-சுவைக்கு ஏற்ப
- சமையல்எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை
- சர்க்கரைவள்ளி கிழங்கின் தோலை உரித்து சீவவும்.
- கடாயினை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
- சீவிய சர்க்கரைசக்கரவள்ளி கிழங்கினை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வதக்கவும். கிழங்கு லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- மல்லித்தூள் சீரகத்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.
- சிறிதளவு சூடு ஆறியதும் பிரட் தூளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் ஷேப்பில் தட்டி எடுக்கவும்.
- மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை புரட்டி வறுத்து எடுக்கவும்.
- டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.