சுவையான மோர் குழம்பு
மோர் குழம்பு சாதாரணமாக நாம் அனைவரும் வீட்டிலேயே வைக்கும் ஒன்றுதான் என்றாலும் இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பக்குவமாக எப்படி வைப்பது என்பதை பார்க்கலாம்.
- தயிர்-1 கப்
- தண்ணீர் - 2 கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - 1 டே.ஸ்பூன்
- கடுகு - 1 டீ.ஸ்பூன்
- சீரகம்- 1/2 டீ.ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 டீ.ஸ்பூன் கர
- வத்தல்- 2-3
- கருவேப்பிலை- தாளிப்பதற்கு
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகாய் -1
- இஞ்சி- சிறிதளவு
- துருவிய தேங்காய்-1/4 கப்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம் -1 சிட்டிகை
செய்முறை
ஒரு கப் தயிரை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு தண்ணீர் இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை எடுத்து சூடு படுத்திக் கொள்ளவும்.
அதனுடன் கடுகு சேர்த்து தாளித்து பின்னர் சீரகம், வெந்தயம் மற்றும் வத்தல் சேர்த்து வறுக்கவும்.
சிறிதளவு பெருங்காய பொடியை சேர்த்து அதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,இஞ்சி சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து மோரினை ஊற்றவும்.
தேவைக்கேற்ப மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்த மோர் குழம்பினை மிதமான தீயில் சூடு படுத்தவும் மற்றும் அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும். அதனுடன் துருவி வைத்ததேங்காய் சேர்க்கவும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கவும்.
சூடான சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.