நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ABC மால்ட்
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் அரைத்து ஜூஸாக உட்கொள்வதே ஏ பி சி பானம் எனப்படுகின்றது.
- தேவையானவை
- ஆப்பிள்- 250 கிராம்
- கேரட்- 250 கிராம்
- பீட்ரூட்- 250 கிராம்
- பாதாம்- 100 கிராம்
- பிஸ்தா- 100 கிராம்
- ஏலக்காய்-10
செய்முறை
ஆப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலை நீக்க வேண்டும்.
கேரட் மட்டும் பீட்ரூட் ஆகியவற்றை நன்றாக துருவி துணியால் அதில் இருக்கும் ஜூசை தனியாக பிழிய வேண்டும். இந்த ஜூஸினை நாம் வேறு ஏதேனும் பலகாரங்கள் செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
துருவிய கேரட் மட்டும் பீட்ரூட்டினை இரண்டு நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.
ஆப்பிளை தோல் நீக்கி மெலிதாக சீவி காய வைக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்குப் பின் ஆரிய கேரட், பீட்ரூட் மற்றும் ஆப்பிளை லேசாக கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை லேசாக நறுமணம் வரும் வரை கடாயில் வறுத்து கடைசியில் ஏலக்காய் சேர்க்கவும்.
கேரட் பீட்ரூட் மட்டும் மாப்பிள்ளை மிக்ஸியில் பவுடராக அரைக்க வேண்டும்.
வறுத்து வைத்த நட்ஸ்களை தனியாக பவுடர் செய்ய வேண்டும்.
இப்பொழுது இரண்டு பவுடர்களையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
காற்று போகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது இந்த பவுடரை கலந்து தினமும் கொடுக்கலாம்.