செய்முறை
கடாயை சூடாக்கி அதில் சிறிதளவு பட்டர் அல்லது எண்ணெயை ஊற்றவும்.
முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதற்கு பின்னால் உலர் திராட்சை, நறுக்கிய பூண்டு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
நறுக்கிய குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும்.
மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
வெட்டி வைத்த பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதங்க விடவும்.
அதற்கு பின்னால் ஏற்கனவே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி இலைகளை மேலே தூவவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி.