Mor Kulambu: மதிய நேரத்தில் சாதமும் அதற்கேற்ற குழம்பும் வைத்து சாப்பிடாமல் நம் இந்திய குடும்பங்களில் மதிய உணவு முழுமை அடையாது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் ஒரே குழப்பம் மதிய நேரத்தில் என்ன குழம்பு வைக்க வேண்டும் என்பதே.
கடுமையான வெயில் காலத்தில் புளிக்குழம்பு மற்றும் காரக்குழம்பு வைத்து சாப்பிட வயிறு இடமளிக்காத என்று நினைத்தால் இந்த இதமான மோர் குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும்.
மோர் குழம்பு சாதாரணமாக நாம் அனைவரும் வீட்டிலேயே வைக்கும் ஒன்றுதான் என்றாலும் இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பக்குவமாக எப்படி வைப்பது என்பதை பார்க்கலாம்.
மோர் இந்த கோடை காலத்திற்கு குளிர்ச்சியை தரும் ஒரு உணவு பொருள் என்பதால் இதை வாரம் ஒரு முறை வீட்டில் வைத்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.
Mor Kulambu:

இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதை நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Mor Kulambu:
- தயிரில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான கால்சியத்தை இது அளிக்கும்.
- உடலின் தசைகள் வளர்வதற்கு தேவையான புரோட்டினை தரவல்லது.
- தயிரில் நேரடியாக காணப்படும் பாக்டீரியா மற்றும் ப்ரோபயாட்டிக் எனப்படும் வேதிப்பொருள் செரிமான மண்டலம் நன்றாக இயங்குவதற்கு உதவுகின்றது.
- மேலும் இதில் நிறைந்திருக்கும் ப்ரோபயாட்டிக் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.
- பாலை புளிக்க வைத்து தயிராக மாற்றும்போது அதிலுள்ள லாக்டோஸ் எனப்படும் வேதிப்பொருளானது சிதைக்கப்பட்டு தயிராக மாற்றப்படுகிறது. எனவே லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்துனை இது வழங்கவல்லது.
- மேலும் தயிரில் வைட்டமின் பி12 பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது.
Mor Kulambu
- தயிர்-1 கப்
- தண்ணீர் – 2 கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய் – 1 டே.ஸ்பூன்
- கடுகு – 1 டீ.ஸ்பூன்
- சீரகம்- 1/2 டீ.ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 டீ.ஸ்பூன் கர
- வத்தல்- 2-3
- கருவேப்பிலை- தாளிப்பதற்கு
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகாய் -1
- இஞ்சி- சிறிதளவு
- துருவிய தேங்காய்-1/4 கப்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம் -1 சிட்டிகை
Mor Kulambu
செய்முறை
- ஒரு கப் தயிரை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு தண்ணீர் இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
- கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை எடுத்து சூடு படுத்திக் கொள்ளவும்.
- அதனுடன் கடுகு சேர்த்து தாளித்து பின்னர் சீரகம், வெந்தயம் மற்றும் வத்தல் சேர்த்து வறுக்கவும்.
- சிறிதளவு பெருங்காய பொடியை சேர்த்து அதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,இஞ்சி சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து மோரினை ஊற்றவும்.
- தேவைக்கேற்ப மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இந்த மோர் குழம்பினை மிதமான தீயில் சூடு படுத்தவும் மற்றும் அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.
- அதனுடன் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும்.
- குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கவும்.
- சூடான சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
நம் இந்திய குடும்பங்களில் அரிசி சாதம் மட்டுமே பிரதானம் இடம் பிடிக்கும் என்பதால் அவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த ரெசிபியாக இது இருக்கும்.
மேலும் காரம் இல்லாமல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற இதமான குழம்பாகவும் இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Mor Kulambu:
Mor Kulambu:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மோர் குழம்பினை எத்தனை வயது முதல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பின் முதல் உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் சேர்ந்து பிசைந்து கொடுக்கலாம்.
மோர் குழம்பில் வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
மோர் குழம்புடன் சுரைக்காய், பீர்க்கங்காய் மற்றும் வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
மோர் குழம்பு திரண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மோர் குழம்பினை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. லேசாக சூடு செய்தால் போதுமானது.
சுவையான மோர் குழம்பு
Ingredients
- தயிர்-1 கப்
- தண்ணீர் - 2 கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - 1 டே.ஸ்பூன்
- கடுகு - 1 டீ.ஸ்பூன்
- சீரகம்- 1/2 டீ.ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 டீ.ஸ்பூன் கர
- வத்தல்- 2-3
- கருவேப்பிலை- தாளிப்பதற்கு
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகாய் -1
- இஞ்சி- சிறிதளவு
- துருவிய தேங்காய்-1/4 கப்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம் -1 சிட்டிகை
Leave a Reply